செய்திகள் :

கீழடி: "ஆதாரம் இல்லாத அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காது" - ஆர்.பி.உதயகுமார்

post image

மதுரையில் நடந்த தனியார் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சியின் சக்கரம் சுழல்கிறதோ இல்லையோ, அரசு பேருந்தின் சக்கரங்கள் துண்டாகி தனியே சுழன்று ஓடிக்கொண்டிருக்கின்றன.

மதுரையிலிருந்து சென்ற அரசுப் பேருந்தின் இரண்டு சக்கரங்கள் சாலையில் தனியாக ஓடியதால் பயணிகள் காயமடைந்துள்ளனர். இது போன்ற செய்திகளை இதுவரை நாம் பார்த்ததில்லை, இந்த ஆட்சியின் நிலையை அறிய இது ஒன்றே போதும்.

கீழடி
கீழடி

அதிமுக ஆட்சியிலிருந்துதான் தமிழகத்தில் 39 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது, கீழடி அகழாய்வு எனும் பிள்ளையைப் பெற்றது அதிமுக, அதற்கு திமுக பெயர் சூட்டுகிறது.

கீழடி அகழாய்வுக்கு முக்கியத்துவம் தந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. திமுக ஆட்சியில் நடைபெறும் பிரச்னைகளை மடைமாற்றுவதற்காக கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு ஆதாரம் கேட்டதைப் பேசி வருகிறது.

கீழடி அகழாய்வைப் பொதுவாகப் பேசி விட முடியாது, அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்படும் அகழாய்வறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது.

மத்திய அரசு விளக்கம் கேட்பது நடைமுறையில் உள்ளதே. அதில் திமுக விளம்பரம் தேடுகிறது, அதிமுக ஆட்சிக் காலத்தில் எங்களிடமும் விளக்கம் கேட்டிருக்கிறார்கள், அப்போதைய அரசுச் செயலாளர் உதயசந்திரன் விளக்கம் கொடுத்திருக்கிறார், மத்திய அரசு அகழாய்வில் விளக்கம் கேட்பதற்கு திமுக அரசு ஏன் குதிக்கிறது?

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

ஆணவத்தின் உச்சத்தில் உள்ள அமைச்சர் டிஆர்பி ராஜாவைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம், அதிமுகவை ஒரு முறை விமர்சித்தால், நாங்கள் நூறு முறை விமர்சிப்போம்.

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுபடுத்தினால் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அரசியல் களத்தில் எடப்பாடி பழனிசாமியைக் குறைத்து மதிப்பிட்டவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஆ.ராசா முன் அடுக்கப்பட்ட புகார்கள்; "திமுகவில் இது சாதாரணம்" - என்ன சொல்கிறார் பெரம்பூர் எம்எல்ஏ?

தேர்தல் நடைமுறைகள் தொடங்க இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் அதற்கு ஆயத்தமாகும் வகையில் வேலைகளை இப்போதே தொடங்கி விட்டன.ஆளும் திமுகவில் மாவட்ட அளவில் கட்சியின் நடப்பு நிலவரத்தைக் க... மேலும் பார்க்க

Iran: "வலியுறுத்தினேன்..." - ஈரான் அதிபருடன் தொலைப்பேசியில் மோடி; என்ன பேசினார்?

ஒரு வாரக் காலத்திற்கும் மேலாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று அமெரிக்காவும் ஈரானின் அணு திட்டப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புக... மேலும் பார்க்க

"ஈரானுக்கு உரிமை உண்டு" - ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

நேற்று வரை, இஸ்ரேல் - ஈரான் தாக்குதலாக இருந்தது, இன்று முதல் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் தாக்குதலாக மாறியுள்ளது. ஈரானின் மூன்று அணு ஆயுத திட்டப் பகுதிகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது. இதை அமெரிக்க அத... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: "பவன் கல்யாண் கட்சித் தலைவராக வரவில்லை; முருக பக்தராக வருகிறார்" - கஸ்தூரி

மதுரையில் நடைபெறுவது அரசியல் விழா அல்ல, தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றும் மாநாடு என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.இன்று மதுரை வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசும்போது, "கும்பாபிஷேகம், முருகன... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: 10,000 வாகனங்களில் 2.5 லட்சம் பேர்? மேடையில் முருகன் சிலைகள் - நேரடி விசிட்

மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டுக்காக அறுபடை முருகன் கோவில்களைப் போன்ற செட் ஒன்று... மேலும் பார்க்க