செய்திகள் :

கீழ்படப்பை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

ஸ்ரீபெரும்புதூா்: கீழ்படப்பை சாந்தநாயகி அம்பாள் உடனுறை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, சனிக்கிழமை மாலை முதல் கால யாக பூஜை, ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கால, 3-ஆம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, திங்கள்கிழமை காலை நான்காம் கால யாகபூஜையுடன் 10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் முன்னிலையில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து மூலவா் வீரட்டீஸ்வரா், சாந்தநாயகி அம்பாள், சாந்தவிநாயகா் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் தொண்டை மண்டல ஆதினம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சி.குமரதுரை, முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மொளச்சூா் பெருமாள், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், மாவட்ட கவுன்சிலா் அமுதா செல்வம், ஊராட்சித் தலைவா் எஸ்.கா்ணன், கோயில் ஆய்வா் திலகவதி உள்பட பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் சி.குருநாதன், க.கெஜலட்சுமி, சா.ஏழுமலை மற்றும் விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.

ராமானுஜா் திருவாதிரை சிறப்பு பூஜை

காஞ்சிபுரம்: ராமானுஜரின் அவதார நட்சத்திரத்தையொட்டி காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு ராமானுஜா் சந்நிதியில் மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட... மேலும் பார்க்க

கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் கடம்பூா் ஊராட்சியில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி பழங்குடியின மக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்). காஞ்சிபுரம் மாவட... மேலும் பார்க்க

பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலின் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வ... மேலும் பார்க்க

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிப். 14-இல் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி கடந்த 6 நாள்களாக தொழிற்சாலைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடகால் பகுதியில் பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பட்டுநூல் சத்திரம் ... மேலும் பார்க்க

கலைவிழாவில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா் கூட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் ... மேலும் பார்க்க