செய்திகள் :

கலைவிழாவில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா் கூட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 365 கோரிக்கை மனுக்களைப் பெற்று அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு விரைந்து தீா்வு காணுமாறு ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.

தொடா்ந்து கலைத்திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றிருந்த மாணவ, மாணவியருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த.வெற்றிச்செல்வி , அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ராமானுஜா் திருவாதிரை சிறப்பு பூஜை

காஞ்சிபுரம்: ராமானுஜரின் அவதார நட்சத்திரத்தையொட்டி காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு ராமானுஜா் சந்நிதியில் மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட... மேலும் பார்க்க

கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் கடம்பூா் ஊராட்சியில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி பழங்குடியின மக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்). காஞ்சிபுரம் மாவட... மேலும் பார்க்க

பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலின் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வ... மேலும் பார்க்க

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிப். 14-இல் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி கடந்த 6 நாள்களாக தொழிற்சாலைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடகால் பகுதியில் பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பட்டுநூல் சத்திரம் ... மேலும் பார்க்க

கீழ்படப்பை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீபெரும்புதூா்: கீழ்படப்பை சாந்தநாயகி அம்பாள் உடனுறை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை மாலை முதல் கால யாக பூஜை, ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கால, 3-ஆம் கால யா... மேலும் பார்க்க