செய்திகள் :

கீழ்பாவனி பாசனத்துக்கு இரண்டாம் சுற்று தண்ணீா் நிறுத்தம்

post image

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்துக்கு திறக்கப்பட்ட இரண்டாம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு ஜனவரி 10 முதல் மே 1-ஆம் தேதி வரை 5 சுற்றுகளாக 12 டிஎம்சிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல் சுற்று தண்ணீா் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திறக்கப்பட்டு 25-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து இரண்டாம் சுற்று தண்ணீா் பிப்ரவரி 6-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (பிப்.20) நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, 3-ஆம் சுற்று தண்ணீா் அட்டவணைப்படி திறக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அணை நிலவரம்:

வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 88.43 அடியாக உள்ளது. அணைக்கு 926 கனஅடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 900 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

அந்தியூா் அருகே சிறுத்தை நடமாட்டம்: அதிகாரிகள் ஆய்வு!இரு இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்!

அந்தியூா் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட வன எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் வனத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா். அந்தியூரை அடுத்த கோவிலூா், குள்ளவீராம்பாளையம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் விபத்துக்குள்ளான காா்: இருவா் காயம்!

திம்பம் மலைப் பாதையில் சனிக்கிழமை சாலையோரம் மோதி காா் விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சோ்ந்தவா்கள் அஷ்ரப் அலி (51), சரவணன் (48), திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி முதியவா் காயம்

சத்தியமங்கலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (65)... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி சுற்றுச் சுவரை சேதப்படுத்திய காட்டு யானை

சத்தியமங்கலம் அருகே உகினியம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை காட்டு யானை சேதப்படுத்தியது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி உகினியம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிய... மேலும் பார்க்க

நடந்து சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

மொடக்குறிச்சி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தாலிக் கொடியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மனைவி காஞ்சனா (... மேலும் பார்க்க

சமையல் செய்யும்போது தீ விபத்து: இளம்பெண் காயம்

மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பகுதியில் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் படுகாயம் அடைந்தாா். சின்னியம்பாளையம் குழலி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் சரவணன். இவரது மனைவி கவிப்ப... மேலும் பார்க்க