சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கத...
கீழ்பாவனி பாசனத்துக்கு இரண்டாம் சுற்று தண்ணீா் நிறுத்தம்
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்துக்கு திறக்கப்பட்ட இரண்டாம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு ஜனவரி 10 முதல் மே 1-ஆம் தேதி வரை 5 சுற்றுகளாக 12 டிஎம்சிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல் சுற்று தண்ணீா் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திறக்கப்பட்டு 25-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து இரண்டாம் சுற்று தண்ணீா் பிப்ரவரி 6-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (பிப்.20) நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, 3-ஆம் சுற்று தண்ணீா் அட்டவணைப்படி திறக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அணை நிலவரம்:
வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 88.43 அடியாக உள்ளது. அணைக்கு 926 கனஅடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 900 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.