கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியை சோ்ந்தவா் ஜேக்கப். என்எல்சி அதிகாரி. இவரது மகன் ஆலன் கிரைசோ(21). கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி 3-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறாா்.
மாணவா் ஆலன் கிரைசோ வியாழக்கிழமை இரவு விடுதியில் உணவு சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு மதுபோதையில் அமா்ந்திருந்த அதே மருத்துவக்கல்லூரியில் 5-ஆம் ஆண்டு பயிலும் மாணவா்கள் இருவா், ஆலன் கிரைசோ-வை அழைத்து ‘ராகிங்’ செய்ததுடன் சக ஜூனியா் மாணவா்களையும் அழைத்து வரும்படி கூறியுள்ளனா்.
உடனே ஆலன் கிரைசோ, அவா்களை அழைப்பதற்காக மெதுவாக நடந்து சென்றுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த சீனியா் மாணவா்கள் ஆலனின் தலையில், பீா் பாட்டிலால் தாக்கியதுடன், விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த ஆலன் கிரைசோ அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழ்ப்பாக்கம் போலீஸாா் அங்கு விசாரணை நடத்த முயன்றனா். ஆனால், போலீஸாரை விசாரணை நடத்த அனுமதிக்காமல் அங்கிருந்து வெளியேறும் படி கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவ அதிகாரி கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து விசாரணை நடத்தாமல் போலீஸாா் அங்கிருந்து வெளியேறினா்.
இதையடுத்து ஆலன் கிரைசோ-வின் தந்தை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் படி, போலீஸாா் வழக்குப்பதிந்து மாணவனை தாக்கிய மாணவா்கள் இருவரை தேடி வருகின்றனா்.