செய்திகள் :

குஜராத்: மாணவர்கள் உட்பட 7 பேர்: 18 மாதங்களாக தொடர் பாலியல் வதை - கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

post image

குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 18 மாதங்களாக 7 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் ஒருவருடன் பழகிவந்திருக்கிறார். இந்த நிலையில், அவர்கள் இருவரும் சந்தித்திருக்கின்றனர். அப்போது மாணவி உடைமாற்றும்போது அந்த நபர் மாணவியை படம் பிடித்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை!

அந்த வீடியோவை சக நண்பர்களிடமும் பகிர்ந்திருக்கிறார். அப்படியே அந்த வீடியோ அவர்களின் நண்பர்களுக்குள் சுற்றியிருக்கிறது. 2023 நவம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி வரை 7 பேர் மாணவியை அணுகி, அந்த வீடியோவை காண்பித்து, `இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துவிடுவேன்' என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அந்த வீடியோ, மாணவியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சென்றதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த காவல்துறை அதிகாரி, ``குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் கல்லூரி மாணவர்களும் அடக்கம். பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. அதில் ஒருதலைபட்சமாக பேசியதால்தான், இந்த வழக்கு காவல்துறைக்கு வந்திருக்கிறது.

காவல்துறை

அந்த இளம்பெண்ணின் தனிப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தி, அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்ச் 11 அன்று குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய நாங்கள் பல குழுக்களை அமைத்துள்ளோம்.” என்றார்.

ஆடு மேய்ப்பதில் தகராறு; வயதான தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர் கைது; திருப்பூரில் கொடூரம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சல்பாளையம் சாலை பெரியதோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (80). இவரது மனைவி பருவதம் (72). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இ... மேலும் பார்க்க

காட்பாடி: லைசென்ஸ் இல்லாத பிஸ்டல்; ஃபைனான்ஸியரின் முதுகை துளைத்த புல்லட் - நடந்தது என்ன?

வேலூர், காட்பாடி அருகேயுள்ள கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஃபைனான்ஸியர் அருள்சுடர். இவர், காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபம் அருகே அலுவலகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை - மருத்துவர் எடுத்த விபரீத முடிவுக்கு என்ன காரணம்?

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன் (53). இவர் சென்னை திருமங்கலத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரின் மனைவி சுமதி. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்தத் தம்பதி... மேலும் பார்க்க

பார்க்கிங் பிரச்னை; விஞ்ஞானியை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்கள்... மொகாலியில் அதிர்ச்சி!

மொகாலியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேசன் மற்றும் ரிசர்ச் மையத்தில் டாக்டர் அபிஷேக் (39) என்பவர் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் ஸ்விட்சர்லா... மேலும் பார்க்க

திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - போலீஸார் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம் (75). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் தி... மேலும் பார்க்க

சென்னை: குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் - கடன் தொல்லை? ; விசாரித்து வரும் காவல்துறை

சென்னை திருமங்கலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருமங்கலம் 7-வது சாலையில் வசித்தவர்கள் மருத்துவர் பாலமுருகன் - வ... மேலும் பார்க்க