செய்திகள் :

"குஜராத் முதல்வராகும் வரை மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இல்லை" - தெலங்கானா CM கூறுவதென்ன?

post image
பிரதமர் மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பு வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (Backward Class) இல்லையென்றும், முதல்வரான பிறகு தன்னுடைய சமூகத்தை அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொண்டு தற்போது அவர்களுக்கெதிரான மனநிலையில் இருக்கிறாரென்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்பது, பா.ஜ.க தரப்பில் எதிர்வினையைத் தூண்டியிருக்கிறது.

ஐதராபாத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ரேவந்த் ரெட்டி, ``பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சட்டபூர்வமாக அந்தப் பட்டியலுக்கு மாற்றப்பட்டவர். 2001-ல் முதல்வராவதற்கு முன் அவருடைய சமூகம் உயர் வகுப்பில் இருந்தது. முதல்வரான பிறகு அதைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைத்தார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி - காங்கிரஸ்

பிறப்பால் அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரல்ல. பெயருக்கு மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவரின் மனநிலை பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு எதிரானது." என்று கூறினார்.

ரேவந்த் ரெட்டியின் இத்தகைய பேச்சுக்கு பாஜக தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் அவர் மீது விழுந்தன. அதில், தெலங்கானா பா.ஜ.க தலைவர் கிஷன் ரெட்டி, ``தெலங்கானா மட்டுமல்லாது நாடு முழுவதும் மக்கள் ஆதரவைக் காங்கிரஸ் இழந்து வருவதால், ரேவந்த் ரெட்டி பொறுமையிழந்து இது போன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்." என்று விமர்சித்தார்.

மோடி - ராகுல்

அதேபோல், மத்திய உள்துறை இணையமைச்சர் பாண்டி சஞ்சய் குமார், ``பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதாகக் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப, இவ்வாறு பிரதமரின் சாதியைப் பற்றி ரேவந்த் ரெடி பேசுகிறார். 1994-ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ​​ மோடி ஓபிசி பட்டியலில் இருந்தார். ராகுல் காந்திக்கு தான் என்ன சாதி என்ன மதம் என்று தெரியுமா அல்லது உங்களுக்குத் தெரியுமா?" என்று சாடினார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

CEC : அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் - பின்னணி? | Vikatan | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* விகடன் இணையதளம் முடக்கம்: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்!* விகடன் இணையதளம் முடக்கம்: ``பாஜகவிற்கு எதிராக பெரு மூச்சு விடுவதையும் கூட...'' - இரா. மு... மேலும் பார்க்க

"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது..." - உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய... மேலும் பார்க்க

`கேலிச்சித்திரத்துக்கு எதிரான அதிகார பிரயோகம் நகைச்சுவையாக மாறிவிடும்'- கார்ட்டூனிஸ்ட் பாலா

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்... மேலும் பார்க்க

'ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்துக்கும் எதிரான தாக்குதல்!' - விகடன் குழும ஆசிரியர் அறிவழகன்

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்... மேலும் பார்க்க