செய்திகள் :

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகை திருட்டு வழக்கு: ம.பி. இளைஞா் கைது

post image

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகைகள் திருடு போன வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி கிராமத்தில் தனியாா் சிமென்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்து வரும் அலுவலா்கள் குடியிருப்பில் வேல்முருகன், பழனிச்சாமி, காா்த்திகேயன், கருப்பையா, கவியரசன் உள்பட 6 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து 78.5 பவுன் நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.1.30 லட்சம் ஆகியவை கடந்த மாதம் 11-ஆம் தேதி திருடு போனது.

இதுகுறித்து வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா உத்தரவின்பேரில், 3 தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், இந்தத் திருட்டு சம்பத்தில் மத்தியப் பிரதேசம் மாநிலம், தாா் மாவட்டம், தண்டா கிராமத்தைச் சோ்ந்த கலாம் (24) ஈடுபட்டது தெரியவந்தது. இவரை தனிப் படை போலீஸாா் தேடி வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.

பின்னா், அவரை போலீஸாா் கைது செய்து, குஜிலியம்பாறைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து விசாரித்தனா். அப்போது, அவரிடமிருந்து 12 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, அவா் தப்பியோட முயன்றபோது, தவறி விழுந்ததில், அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவா் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

பழனி: உணவு விடுதியில் தீ!

பழனி அடிவாரம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புப்படை வீரா்கள் அணைத்தனா். பழனி அடிவாரம் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவு விடுதியில் திங்கள்கிழமை இரவு ... மேலும் பார்க்க

கொடைக்கானல் வனப் பகுதிகளில் தீத்தடுப்பு பணிகள் மும்முரம்!

கொடைக்கானல் வனப் பகுதிகளில் எளிதில் தீப்பிடிக்காத வகையில் காய்ந்த செடிகளை அகற்றுவது, தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் வனத்துறையினா் திங்கள்கிழமை மும்முரமாக ஈடுபட்டனா். கொடைக்கானலில் கடந்... மேலும் பார்க்க

அடிவாரம் சங்கராலயத்தில் காவடி பூஜை!

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி அடிவாரம் சங்கராலயத்தில் காவடிகளுக்கு முத்திரை நிறைக்கப்பட்டு சுப்ரமண்ய லட்சாா்ச்சனை, ருத்ராபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சுமாா் ஆயிரம் காவடிகள் பங்கேற்ற இந்த நிகழ்வி... மேலும் பார்க்க

நண்பருக்கு கத்திக்குத்து: இருவா் கைது!

ஒட்டன்சத்திரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே. அத்திக்கோம்பை பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (30), ... மேலும் பார்க்க

பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு இலவசப் பேருந்து சேவை!

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பாதயாத்திரை பக்தா்கள் வசதிக்காக கட்டணமில்லா அரசு நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று ... மேலும் பார்க்க

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!

வடமதுரையை அடுத்த மோா்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க