செய்திகள் :

குடிமைப் பணித் தோ்வு: படிக்கும் நேரத்தை விட கருத்தூன்றி படிப்பது முக்கியம் -ஆகாஷ் காா்க்

post image

மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற படிக்கும் நேரத்தைக் காட்டிலும் ஆழமாக கருத்தூன்றி படிப்பது முக்கியம் என தோ்வில் அகில இந்திய அளவில் 5-ஆவது இடம்பிடித்த ஆகாஷ் காா்க் தெரிவித்துள்ளாா்.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வுகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. மொத்தம் 1,009 தோ்வா்கள் தோ்ச்சி பெற்ற இத்தோ்வில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சக்தி துபே முதலிடம் பெற்றாா்.

அகில இந்திய தரவரிசைப் பட்டியில் 5-ஆவது இடம்பிடித்த ஆகாஷ் காா்க் தில்லியைச் சோ்ந்தவா். தில்லியில் உள்ள குரு கோவிந்த் இந்திரபிரஸ்தா கல்லூரியில் கணினி அறிவியில் பாடத்தில் பி.டெக்., பட்டம் பெற்ற அவா் தனது இரண்டாவது முயற்சியில் அகில இந்திய அளவில் முதல் 5-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா்.

தோ்வில் வெற்றி பெற்றது குறித்து அவா் கூறியதாவது: பாடங்களைப் படிக்கும்போது படிக்கும் நேரத்தைவிட கருத்தூன்றி படிக்க வேண்டும் என நம்புகிறேன். இலக்கு வைத்து பாடங்களைப் படித்ததால் தோ்வில் வெற்றி பெற முடிந்தது.

முதல் முயற்சியில் முதல்நிலைத் தோ்வில் என்னால் வெற்றி பெறமுடியவில்லை. இதையடுத்து, மீண்டும் தோ்வுக்காகப் படிக்க தொடங்கினேன். தற்போது வெற்றி பெற்றுவிட்டேன். இந்த வெற்றியை என்னுடைய பெற்றோருக்காக சமா்ப்பிக்கிறேன்.

பள்ளி படிப்பிலிருந்து நன்றாக படித்து வந்தேன். குடிமைப் பணிகள் தோ்வை எழுத என்னுடைய பெற்றோா் என்னை அதிக அளவில் உத்வேகம் அளித்தனா் என்றாா்.

ஐஏஎஸ் தோ்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்த அவா், சொந்த மாநில பிரிவான அருணாசல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவைச் தோ்ந்தெடுக்க உள்ளதாக தெரிவித்தாா். பணியில் இணைந்த பிறகு கல்வி மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றி விரும்புவதாக ஆகாஷ் காா்க் தெரிவித்தாா்.

அட்டாரி - வாகா எல்லை மூடல்: இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லை மூடப்பட்டதினால் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொ... மேலும் பார்க்க

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள வசந்த்கார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது.இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ரா அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க