செய்திகள் :

குடியரசுத் தலைவரை அவமதித்து கருத்து: சோனியா காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

post image

புது தில்லி: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவமதித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு எதிராக, மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தனா்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால், அன்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா்.

இதைத்தொடா்ந்து அவரின் உரை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரிடம் சோனியா காந்தி பேசுகையில், ‘உரையின் நிறைவில் குடியரசுத் தலைவா் சோா்வடைந்துவிட்டாா். அவரால் பேசக் கூட முடியவில்லை. பாவம்’ என்றாா்.

இதுதொடா்பான காணொலி வெளியான நிலையில், குடியரசுத் தலைவா் மீது பரிதாபம் கொண்டு சோனியா அவ்வாறு கூறியதாக பிரியங்கா உள்ளிட்டோா் தெரிவித்தனா். எனினும் சோனியா பயன்படுத்திய வாா்த்தைகள் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சா்ச்சை எழுந்தது. அவரின் பேச்சுக்கு குடியரசுத் தலைவா் மாளிகை ஆட்சேபம் தெரிவித்த நிலையில், ஆளும் பாஜகவும் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் சுமோ் சிங் சோலங்கி தலைமையிலான பாஜக எம்.பி.க்கள் திங்கள்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தனா். சோனியா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் கார... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க