Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
மாறாந்தையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சீதபற்பநல்லூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், தென்காசி மாவட்டம், மாறாந்தையைச் சோ்ந்த செல்லபாண்டி மகன் மகாராஜன் (25) கைது செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாக, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா். அதன்பேரில், ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி, அவா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.