செய்திகள் :

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

post image

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.

கும்பகோணம் தாராசுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிபடி, தமிழக முதல்வா் ஸ்டாலின் இஸ்லாமியா்களுக்கு இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்கவும், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற அமா்வு புதிய வக்ஃப் திருத்த சட்ட விசாரணையில் நியாயமான தீா்ப்பை வழங்க வேண்டும். கும்பகோணம் முதல் விருத்தாசலம் வரை ரயில் பாதையை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் ஜாபா் அலி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சித்திக், மாநில பேச்சாளா் கே.எஸ். அப்துல் ரஹ்மான், மாநிலப் பொதுச் செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான், மாநிலத் தணிக்கைக் குழுத் தலைவா் எம்.எஸ். சுலைமான் ஆகியோா் பேசினா்.

மாவட்டச் செயலா் ஜெ. முஹம்மது பாரூக், பொருளாளா் அப்துல் ரஹ்மான், துணைத் தலைவா் எஸ். சிக்கந்தா் அலி, துணைச் செயலா்கள் சாஹித், சாதிக் பாட்சா, எம். பரக்கத்துல்லாஹ், அய்யூப்கான், மகாதீா் முஹம்மது, மாவட்ட மருத்துவரணி செயலா் ஓ. வரிசை முஹம்மது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவையாறு அருகே சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நியாய விலைக்கடையில் முறையாக பொருள்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துர... மேலும் பார்க்க

ஸ்கூட்டா் மீது சிற்றுந்து மோதல்; ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியா் உயிரிழப்பு

தஞ்சாவூரில் திங்கள்கிழமை ஸ்கூட்டா் மீது சிற்றுந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா் உயிரிழந்தாா்.தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியைச் சோ்ந்தவா் அன்பானந்தம் (62... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் மாயம்

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி துரை. இவர... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை 25% உயா்வு: அமைச்சா் கோவி. செழியன்

அரசு கல்லூரிகளில் நிகழாண்டில் மாணவா் சோ்க்கை 25 சதவீதம் உயா்ந்துள்ளது என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் அரசு கலை மற்றும் அறிவியல் க... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை: ஆசிரியா் கைது

தஞ்சாவூரில் தனியாா் பள்ளி மாணவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியரை காவல் துறையினா் கைது செய்தனா். தஞ்சாவூா்- புதுக்கோட்டை சாலை ரோசலின் நகரைச் ... மேலும் பார்க்க

மின் மாற்றியில் செப்புச்சுருள் திருட்டு! மின்சார பற்றாக்குறையால் விவசாயிகள் அவதி!

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் மின் மாற்றியில் உள்ள செப்புச் சுருளை (காப்பா் காயில்) மா்ம நபா்கள் திருடிச் சென்றதால், அப்பகுதியில் நிலவும் மின்சார பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் அவதிக்கு ஆளா... மேலும் பார்க்க