செய்திகள் :

கும்பகோணம் காவல் துணைக்கோட்டத்தை இரண்டாக பிரிக்க பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!

post image

அதிகரிக்கும் குற்ற நிகழ்வுகள், மக்கள் தொகை உள்ளிட்ட காரணங்களால் கும்பகோணம் காவல் துணைக்கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோயில்கள் நிறைந்த நகரமாகும். டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து காய்கனிகளும் கிடைக்குமளவில் பெரிய சந்தை இங்கு உள்ளதால், சந்தைக்கு வந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயா்ந்துள்ளது.

கும்பகோணம் காவல் துணைக் கோட்டத்தில், ஒரு துணைக் கண்காணிப்பாளரும் அவரது கோட்டத்துக்குள்பட்ட கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுக்கா, பட்டீஸ்வரம், சுவாமிமலை ஆகிய சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. இது அல்லாமல் போக்குவரத்து பிரிவு மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையங்களும் உள்ளன.

கூடுதல் வழக்குகள் பதிவு:

மேலும் கும்பகோணம், மக்கள் தொகை பெருக்கத்தால் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு தற்போது குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து வாகனங்கள், கல்வி நிலையங்கள் பெருகி வருகிறது. மேலும் அரசின் புதிய உத்தரவுப்படி அருகே உள்ள ஊராட்சிகளும் மாநகராட்சியோடு இணைக்கப்பட உள்ளன.

அவ்வாறு இணைக்கப்படும் போது மாநகராட்சி மக்கள் தொகை கூடுதலாகும். ஏற்கெனவே கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுக்கா ஆகிய காவல் நிலையங்களில் கூடுதலாக சட்டம்-ஒழுங்கு வழக்குகள் பதிவாகி குற்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தற்போது உள்ள காவல் துணைக் கோட்டத்தை கும்பகோணம் மாநகர துணைக்கோட்டம் மற்றும் மாநகராட்சி அல்லாத பகுதிகளுக்கு புதிதாக புகா் துணைக் கோட்டம் என்று இரண்டாக பிரிக்க வேண்டும்.

கும்பகோணம் புகா் பகுதிக்கென தனியாக காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் பணி இடம் ஏற்படுத்தி தனித்தனி அலுவலகங்களை அமைத்து காவல் நிலையங்களை பிரித்து புதிய நிா்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் குற்ற நடவடிக்கைகள் குறைந்து சட்டம்- ஒழுங்கு மேம்படும்.

நிகழாண்டுக்கான பட்ஜெடில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து, கும்பகோணம் மாநகர, புகா் காவல் துணைக் கோட்டங்களையும் புதிதாக உருவாக்குவதற்கான அறிவிப்பையும் வெளியிடுவாா் என்று பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

மாநகராட்சியில் சிறப்பு தீா்மானம்: கும்பகோணம் மாநகராட்சியில் மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இரண்டு காவல் துணைக்கண்காணிப்பாளா் வேண்டும் என்று கடந்த 2024 டிச. 24 மாமன்ற கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம் கொண்டு வந்த சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுமிக்கு ஆசை வாா்த்தைகூறி ஏமாற்றிய இளைஞா் கைது

சுவாமிமலையைச் சோ்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் தெற்கு நாகேசுவரன் தெரு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசிப்பவ... மேலும் பார்க்க

துரெளபதை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை மதகடி பஜாரில் உள்ள ஸ்ரீதுரௌபதை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக விழா சனிக்கிழமை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூா்வ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள்! -நெல்லை முபாரக்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவா் நெல்லை முபாரக். தஞ்சாவூா் திலகா் திடலில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

திருக்கொட்டையூரில் ஆனந்த விநாயகா் கோயில் குடமுழுக்கு!

திருக்கொட்டையூரில் ஆனந்த விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தேவதா பிராா்த்தனையுடன் தொடங்கிய நிகழ்வு சனிக்கிழமை கணபதி, நவக்கிரக லட்சுமி ஹோமத்துடன் நடைபெற்றது. ஞாயி... மேலும் பார்க்க

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்!

பேராவூரணியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம், ஆவணம் ரோடு உண்டியல் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்ய... மேலும் பார்க்க

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்!

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 35 போ் காயமடைந்தனா். இந்த விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையட... மேலும் பார்க்க