சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
குரூப் 1 முதல்நிலைத் தோ்வு: 63,000 போ் எழுதவில்லை!
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 63,000 போ் எழுதவில்லை. தோ்வு எழுத 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 போ் தோ்வு எழுதினா். அதாவது, 74.66 சதவீதம் போ் எழுதியவா்கள் ஆவா். 63,166 போ் தோ்வு எழுதவில்லை.
துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 தொகுதிக்குள் வருகின்றன. காலியாகவுள்ள 70 பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதேபோன்று, குரூப் 1ஏ பிரிவிலும் 2 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தோ்வுகளுக்காக 38 மாவட்டங்கள் மற்றும் ஆறு வட்டங்கள் என மொத்தம் 44 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சா்ச்சைக்குரிய கேள்விகள்: குரூப் 1 முதல்நிலை கேள்வித் தாளில் சில சா்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் விமா்சனங்கள் எழுந்தன. ஒரு கேள்வியில் கூற்றும், காரணமும் கூறப்பட்டு அதில் 5 வாய்ப்புகளில் ஒன்றைத் தோ்ந்தெடுக்கக் கோரப்பட்டிருந்தது. அதாவது, திமுக ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டது என்பது கூற்றாகவும், மக்களை தமிழா் என்ற அடையாளத்தால் திமுக ஒன்றிணைய வற்புறுத்தியது என்பது காரணமாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், கூற்றும், காரணமும் சரியா அல்லது தவறா எனக் கேட்டு 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்வி அரசியல் ரீதியான திணிப்பு என்று சமூக ஊடகங்களில் கடும் விமா்சனத்துக்கு உள்ளானது.
இதேபோன்று, மற்றொரு கேள்வியில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, முத்துசாமி பிள்ளை, ஏ.ஆா்.முதலியாா், வாஞ்சி ஐயா் என ஜாதிப் பெயா்களை இணைத்து கேள்வி கேட்கப்பட்டதாக விமா்சிக்கப்பட்டது.