செய்திகள் :

குறுக்கே வந்தப் பூனை; அடித்து, உயிரோடு கொளுத்திய மூடநம்பிக்கையாளர்கள்... உபி-யில் அதிர்ச்சி சம்பவம்!

post image

குறுக்கே பூனை வந்ததால், அந்தப் பூனையை உயிரோடு எரித்து கொலைசெய்த சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியில் ஒரு பெண்ணும் அவரது நண்பரும் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, அந்த வழியே காட்டுப்பூனை ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. பூனை குறுக்கே வந்தது கெட்ட சகுனம் என்ற மூடநம்பிக்கைக் கொண்ட அவர்கள், கண்மூடித்தனமான ஆத்திரத்தில் அந்தக் காட்டுப் பூனையைப் பிடித்து அடித்ததோடு, உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தீ வைத்து எரித்துக் கொன்றதை வீடியோவாகவும் தங்கள் செல்போனில் எடுத்துள்ளனர். அதை சோஷியல் மீடியாவிலும் ஷேர் செய்திருக்கிறார்கள்.

காவல்துறை

இந்த விவகாரம் குறித்து, போஜ்பூர் காவல் நிலையத்துக்கு இ-மெயில் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். பெண் பயணித்த பைக் எண் குறித்து விசாரித்ததில், போஜ்பூரைச் சேர்ந்த பிரியா என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, பிரியா மற்றும் அவரது நண்பர் மீது காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மண்ணுக்குள் புதைந்திருந்த 90 வருட ரேர் விஸ்கி பாட்டில்கள்... வாக்கிங் சென்றபோது கண்டெடுத்த இளைஞர்!

அமெரிக்காவின் ஜெர்சி நகரத்தின் மார்கேட் பியர் கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், சுமார் 90 ஆண்டுகள் பழைமையான விஸ்கி பாட்டில்களைக் கண்டெடுத்துள்ளார்.ஆஸ்டின் கொன்டெஜியாகோமோ என்ற அந்த ந... மேலும் பார்க்க

ஈபிள் கோபுரம் மீது ஹிஜாப்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல பிராண்டின் விளம்பரம் - என்ன நடந்தது?

டச்சு நாட்டைச் சேர்ந்த ஃபேஷன் பிராண்டான மெர்ராச்சி, சர்ச்சைக்குரிய விளம்பர வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியிட்டது. அந்த விளம்பர வீடியோவில், பிரான்ஸ் நாட்டிலுள்ள புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம... மேலும் பார்க்க

பாம்பன் மீனவருக்கு ஜாக்பாட் : இரண்டு `கூறல்’ மீன்கள், ரூ.2.60 லச்சத்துக்கு ஏலம் - என்ன காரணம்?

பாம்பன் தென்கடல் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடித்துவிட்டு நேற்று கரை திரும்பினர். தெற்குவாடி மீன் இறங்கு ... மேலும் பார்க்க

Indonesia: இயேசு கிறிஸ்துவை குறிப்பிட்டு பேசிய திருநங்கை TikTok பிரபலம்; சிறைத் தண்டனை விதித்த அரசு!

இயேசு கிறிஸ்துவின் முடி வெட்டுதல் குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்ததற்காக இந்தோனேசியாவில் உள்ள நீதிமன்றம் ஒரு திருநங்கைக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது .டிக்டோக்கில் 4,42,000 க... மேலும் பார்க்க