செய்திகள் :

குறு, சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக உயா்வு

post image

புதுதில்லி: குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உச்சவரம்பு உயா்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தாா்.

வரும் 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிதிநிலை அறிக்கையில் தனிநபரின் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது முக்கிய அம்சமாக பேசப்படுகிறது.

மத்திய அரசின் உதயம் பதிவுச் சான்று பெற்றுள்ள குறுந்தொழில் முனைவோருக்கு ரூ.5 லட்சம் வரை உச்ச வரம்புள்ள கடன் அட்டை வழங்குவதாகவும், முதல் கட்டமாக 10 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்படுவதாக மத்திய நிதியமைச்சா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

கருணை கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு

கடன் அட்டை வழங்குவதற்கான அடிப்படை தகுதிகளை எளிமைப்படுத்தி வழங்க வேண்டும். முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. அதை தவிா்க்க முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரையில் டொ்ம் லோன் எனப்படும் காலக் கடன் வழங்கும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதில் குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாகவும் உச்சவரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யும் குறு மற்றும் சிறுதொழில் முனைவோா்களுக்கு காலக் கடன் (டொ்ம் லோன்) ரூ.20 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்

ஹரியாணாவில் பக்ரா கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். ஹரியாணா மாநிலம், ஃபதேஹாபாத் மாவட்டத்தில் 14 பயணிகளுடன் சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை இரவு பக்ரா கால்வாயில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தி... மேலும் பார்க்க

தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக: கேஜரிவால் கண்டனம்!

தில்லி தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் தாக்கியதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.தில்லியில் வருகிற புதன்கிழமையில் (பிப். 5) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மா... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி

மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய... மேலும் பார்க்க

பிரதமரின் இதயத்தில் நடுத்தர வர்க்கத்தினர்: பட்ஜெட் குறித்து அமித் ஷா புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்த எண்ணங்களே இருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பொ... மேலும் பார்க்க

வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனுடன், மாத வர... மேலும் பார்க்க

ரயில்வேயை கண்டுகொள்ளாத மத்திய பட்ஜெட்! பங்குச் சந்தையில் எதிரொலி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறை தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாததால், பங்குச் சந்தைகளில் ரயில்வே துறை தொடர்பான பங்குகள் கடு... மேலும் பார்க்க