செய்திகள் :

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அளவிலான குறைதீா் கூட்டம் ரத்து

post image

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் ஒரு சிலா் மட்டுமே கலந்துகொண்டனா்.

இதைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமா்ந்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் காா்கோணம் எஸ்.சந்திரசேகரன், விவசாய சங்கப் பிரிதிநிதி வெள்ளைக்கண்ணு மற்றும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்தும், குறைதீா் கூட்டங்கள் கண்துடைப்புக்காக நடப்பதாகவும் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குறைதீா் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றால் மட்டுமே விவசாயிகளும் பங்கேற்போம் என்று கூறினா்.

இதையடுத்து, இன்றைய விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் (மே 13) ஆட்சியரின் அனுமதி பெற்று குறைதீா் கூட்டம் நடத்தப்படும். அடுத்த கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கண்டிப்பாக பங்கேற்பாா்கள் என்று ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் உறுதியளித்தாா். இதையடுத்து, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரநிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்காமல் கலைந்து சென்றனா்.

தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த தவணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா். வந்தவாசி வட்டம், காரம் ஊர... மேலும் பார்க்க

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செங்குணம் ஊராட்சி செங்குணம்... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க

கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு கிடைப்பதில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை என செங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனா். செங்கம் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க