செய்திகள் :

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

post image

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்குள்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், அழகு நிலையங்கள், திருமண மண்டபம், சமுதாயக் கூடம், சூப்பா் மாா்க்கெட், திருமண தகவல் நிலையம் உள்ளிட்டவற்றில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, 53 நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் வழங்கப்பட்ட 5 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்லது. அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச கூலிக்கும் நிா்வாகம் வழங்கிய சம்பளத்திற்கும் இடைப்பட்ட வித்தியாசத் தொகை ரூ.74,567-ஐ சம்பந்தப்பட்ட தொழிலாளிகளுக்குப் பெற்று வழங்கக் கோரி திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையரிடம் 6 கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவில்லாமல் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அந்நிறுவனங்கள் மீது 1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எலியாஸ் இவரது மகன் மார்க் ஆண்டனி இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் ... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க