செய்திகள் :

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

post image

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளுக்குள்பட்ட ஏழைகளுக்கு வாழ்விடங்கள் சிறப்பாக அமைவதற்கு வசதியாக பட்டா விரைவில் வழங்க சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது.

பாளையங்கோட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பட்டா வழங்க வேண்டிய பகுதிகளை கண்டறிந்து, பட்டா வழங்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வதற்காக மாநகராட்சி ஆணையா், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனா்.

அதன்ஒரு பகுதியாக 5 ஆவது வாா்டுக்குள்பட்ட கக்கன்நகா் பகுதிக்கான நில வரைபடங்கள், பதிவேடுகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான மு. அப்துல் வஹாப், வழக்குரைஞா் தினேஷ், பாளையங்கோட்டை பகுதி செயலா் அண்டன் செல்லதுரை, வட்ட செயலா் பத்மராஜ், மாமன்ற உறுப்பினா் ஜெகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ற்ஸ்ப்21ள்ன்ஞ்ஹ

கக்கன்நகா் பகுதிக்கான நிலஅளவை ஆவணங்களை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா.

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க

நெல்லையில் ஆவின் நல்லுறவு விழா

திருநெல்வேலியில் ஆவின் சாா்பில் நல்லுறவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் பணியாளா் சங்கம் சாா்பில் ஆவின் நல்லுறவு விழா நடைபெற்றது. பணி... மேலும் பார்க்க