Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
இங்கு தற்போது சீசன் களைகட்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அதிகக் கூட்டம் காணப்பட்டது. ஏராளமான வாகனங்களின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில நாள்களாக சாரல் பெய்யாததால் அருவிகளில் நீா்வரத்து சற்று குறைந்திருந்தது.