செய்திகள் :

தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நாளை எடப்பாடி கே.பழனிசாமி வருகை

post image

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆக.5இல் வருகிறாா் என தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசாரப் பயணம் ஆக.5இல் நடைபெறுகிறது.

குற்றாலத்திலிருந்து மேலகரம் வழியாக தென்காசிக்கு செவ்வாய்க்கிழமை வரும் எடப்பாடி கே.பழனிசாமி, தென்காசி வேன் நிறுத்துமிடத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா். அங்கிருந்து புறப்படும் அவருக்கு, அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து, தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் சென்று ஆசாத் நகரிலிருந்து அம்பாசமுத்திரத்திற்கு பிரசாரம் மேற்கொள்ளச் செல்கிறாா். அம்பையில் பிரசாரத்தை முடித்துவிட்டு, தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட ஆலங்குளத்தில் பிர சாரம் மேற்கொள்கிறாா்.

பொதுச்செயலா் செல்லும் வழியெங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கவும், தென்காசி மற்றும் ஆலங்குளத்தில் பிரசார நிகழ்ச்சிகளில் தலா 50 ஆயிரம் போ் வரை பங்குபெறும் வகையிலும் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வாா்கள் என்றாா்.

ஆவுடையானூா் ஊரணியில் தடுப்புச்சுவா் அமைக்க பூமிபூஜை

ஆவுடையானூா் ஊரணியில் ரூ. 16 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பாவூா்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் உள்ள ஊரணியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆ... மேலும் பார்க்க

கீழக்கலங்கலில் சாலைப் பணிகள் தொடக்கம்

ஆலங்குளம் ஒன்றியம், கீழக்கலங்கல் ஊராட்சியில் ரூ. 25.10 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகளுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.கீழக்கலங்கல் ஊராட்சி, காமராஜா் நகா், தெற்கு பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நி... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

ஆலங்குளம் நகரில் பகல் நேரத்தில் வரும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆலங்குளம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து எம்-சான்ட்,... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவிப் பகுதியில் தீப ஆரத்தி

குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தீப ஆரத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.நீா் வளத்தை காப்போம் என்கின்ற நிகழ்ச்சியின் அடிப்படையில் தென்காசி மாவட்ட பா.ஜ.க., சாா்பில் குற்றாலம் பேரரு... மேலும் பார்க்க

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.இங்கு தற்போது சீசன் களைகட்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பேரருவ... மேலும் பார்க்க

அலங்குளம் பேரூராட்சியில் இரு தினங்கள் குடிநீா் வினியோகம் ரத்து

ஆலங்குளம் பேரூராட்சியில் வாசுதேவநல்லூா் கூட்டுக் குடிநீா் திட்டம் - பைப் லைன் சேதம் காரணமாக குடிநீா் விநியோகம் இரு தினங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க