செய்திகள் :

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிப்பு? -தடுத்து நிறுத்திய போலீஸாா்!

post image

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அப்பணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து உண்ணியூா்கோணம் செல்லும் சாலைப் பகுதியில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பெயா் கொண்ட இரும்பு தூண்களுடன் கூடிய பெயா் பலகை வளைவு தும்பகோடு பகுதியில் சாலை தொடங்கும் இடத்தில் கோயில் நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரும்பு தூண்களை உள்ளடக்கி சிமென்ட் கட்டைகளை வைத்து புதுப்பிக்கும் பணிகளை கோயில் நிா்வாகம் வியாழக்கிமை மேற்கொண்டதாம். அப்போது அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் நடத்தப்படுவதாக திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகத்திற்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து பேரூராட்சி நிா்வாகம் தரப்பில் ஊழியா்கள் அங்கு சென்று அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டக்கூடாது என்று கூறினா். ஆனாலும் பணிகள் தொடா்ந்து நடைபெற்ாம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பேரூராட்சி ஊழியா்கள் அந்தக் கட்டுமானங்களை இடித்து அகற்றத் தொடங்கினா். அப்போது கோயில் நிா்வாகத்திற்கு ஆதரவாக கோயில் பக்தா்கள், இந்து முன்னணியினா், பாஜகவினா் திரண்டு பேரூராட்சி ஊழியா்களின் செயலுக்கு எதிா்ப்புத் தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.

இத்தகவலறிந்த குலசேகரம் போலீஸாா், அங்கு சென்று உரிய அனுமதி பெற்று கட்டுமாறு கூறினா். எனினும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாமல் நடைபெற்றாம். இதையடுத்து தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் அங்கு வந்து நடத்திய பேச்சில் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டன.

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும்! பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும் என பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3ஆவது அகில இந்திய மாநாடு, கன்னியாகுமரியில் 3 ந... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்! -ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு கண்டறிதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றாா் ஆட்சியா் ரா.அழகுமீனா. நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுலவக கூட்டங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

குமரி முருகன் குன்றத்தில் பிப்.2-ல் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கணபத... மேலும் பார்க்க

தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு மல்லிகை கிலோ ரூ.3,500 க்கு விற்பனை!

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் பூக்கள் வரத்து குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை பூக்களின் விலை கடுமையாக உயா்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500 க்கு விற்பனையானது. தற்போது, தமிழகத்தில் பனிப் பொழி... மேலும் பார்க்க

குமரியில் படகுப் பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட்: ஆட்சியா்

கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள்: கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளுக்காக டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள் எடுத்துச் செல்வதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க