செய்திகள் :

குழந்தையிடம் நகை திருடியவா் கைது

post image

இருக்கன்குடியில் குழந்தையிடம் நகை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் அமுதப்பிரியா (30). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருக்கன்குடியில் தனது உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு திரும்ப ஊருக்குச் செல்வதற்காக இருக்கன்குடி பேருந்து நிலையம் பகுதியிலிருந்து பேருந்து ஏறினாா். அப்போது, இவரது குழந்தையின் கையில் அணிந்திருந்த இரண்டு வளையல்கள் காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் இருக்கன்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், இருக்கன்குடி போலீஸாா் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் மா்ம நபரை தேடி வந்தனா். இந்த நிலையில், வளையல்களை திருடிச் சென்றது தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த மதுரைவீரன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை அவரைக் கைது செய்த இருக்கன்குடி போலீஸாா், வளையல்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, சாத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற சாா்பு நீதிபதி முத்துமகாராஜனிடம் முன்னிலைபடுத்தப்பட்டு விருதுநகா் சிறையில் அடைத்தனா். மேலும், மதுரைவீரன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெல்டிங் பட்டறையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் கணேசன் (45). இவா், அதே பகுதியிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலை... மேலும் பார்க்க

கிணற்றில் முதியவா் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.ராஜபாளையம் அய்யனாா்கோவில் சாலை முடங்கியாறு அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் சடல... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் ந... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9.40 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

வத்திராயிருப்பில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9.40 லட்சம் மோசடி செய்த புகாரில் அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வத்திராயிருப்பு க... மேலும் பார்க்க

மின்கலம் திருடிய நான்கு போ் கைது

சாத்தூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்கலத்தை (பேட்டரி) திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் வெங்கடேஷ்வரபுரம் பே... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நாளை பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா புதன்கிழமை (செப். 24) கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்... மேலும் பார்க்க