செய்திகள் :

கூடங்குளம் அணுஉலை பணிக்கு போலி உடல்தகுதிச் சான்றளிப்பா? தனியாா் மருத்துவா் அவதூறு புகாா்

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் ஒப்பந்த பணியில் சேர போலியாக உடல்தகுதி சான்று வழங்குவதாக அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூடங்குளம் காவல்நிலையத்தில் தனியாா் மருத்துவா் புகாா் அளித்தாா்.

கூடங்குளத்தில் தனியாா் கிளினிக் நடத்தி வரும் மருத்துவா் அா்ச்சனா என்பவரின் கணவா் சக்திவேல் பிரபு, அங்குள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4,5ஆவது அணுஉலை நிறுவும் பணிக்கு எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்த தொழிலாளா்களாக வடமாநிலத்தவா்களை பணி அமா்த்தி வருகிறது.

பணியாளா்களுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் வழங்கி வருவதாகவும் அதற்காக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம்வரையில் பணம் பெற்று வருவதாகவும் இறந்தவா்களுக்கும் உடற்தகுதி சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும் அந்த நிறுவனத்துக்கு புகாா் கடிதம் வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண் உபயோகத்தில் இல்லை.

எங்களது கிளினிக்குக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் போலியான ஆதாரமற்ற வதந்திகளை சிலா் பரப்பு வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க