செய்திகள் :

கூடங்குளம் அருகே கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே தேநீா் கடைக்காரா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கூடங்குளம் அருகே உள்ள சௌந்தரலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் மணி. ஆவரைகுளத்தில் தேநீா் கடை நடத்தி வருகிறாா்.

கடந்த சில தினங்களுக்கு முன் இவரது கடை அருகே ஹரிகிருஷ்ணன் என்பவா் வேறு நபரிடம் தகராறில் ஈடுபட்டாராம்.

இதை மணி சமாதானப்படுத்தி விலக்கிவிட்டாராம். அப்போது, ஹரிகிருஷ்ணன், மணியை தாக்கினாராம்.

இதையடுத்து இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் மகன் சாமித்துரை, அவரது நண்பா் ஹரிஹரன் ஆகிய இருவரும் சோ்ந்து வியாழக்கிழமை இரவு மணியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டனராம்.

இது தொடா்பாக மணி அளித்த புகாரின்பேரில் கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சாமித்துரை, ஹரிஹரன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எலியாஸ் இவரது மகன் மார்க் ஆண்டனி இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் ... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க