செய்திகள் :

கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்

post image

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

"தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி, கூட்டணி கட்சிகளின் ஆட்சி. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்.

மத்திய அரசு நிதிகளை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். அது எந்த திட்டமாக இருந்தாலும் சரி, மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்திவிட்டு, தாங்களே செய்ததாகக் கூறுகிறார் முதல்வர். தமிழக அரசின் திட்டங்களில் 70% மத்திய அரசின் நிதிதான்.

திமுகவினர் தமிழ், தமிழ் பண்பாட்டை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழ், தமிழ் பண்பாட்டை வைத்து அரசியல் செய்வது இந்த காலத்தில் எடுபடாது; பண்டைய கால செயல் முறை இப்போது எடுபடாது.

கீழடியைப் பொருத்தவரை ஏற்கெனவே சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில சான்றுகள் தேவைப்பட்டுள்ளது. அவ்வளவுதானே தவிர, அதை வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், சரஸ்வதி நதி பற்றி பேசுகிறார். அவர் எப்போதுமே தமிழக மக்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறி தமிழ்நாட்டிற்கு, தமிழுக்கு தொண்டு செய்வது போல காட்டிக்கொண்டு அவர்களது ஆட்சியை கொண்டுவருவதுதான் வழக்கமாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் நிச்சயமாக அது எடுபடாது" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்! வேறு பாதையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள்!

சிதம்பரத்தில் நாட்டு வெடி வெடித்ததில் பெண் பலி

சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் பலியானார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சம்பந்தம் என்ற கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை க... மேலும் பார்க்க

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம... மேலும் பார்க்க

கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

கடலூர் மாவட்டம், பார்வதிபுரம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிக்கையில், ... மேலும் பார்க்க

கள் இறக்கும் போராட்டம்: பனைமரம் ஏறிய சீமான்

கள் இயக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் பனைமரம் ஏறி கள் இறக்கும் ... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம்- முதல்வர் ஸ்டாலின்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடை... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு விருது விழா! இறுதிக் கட்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு!

தமிழகத்தில் 39 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்குகிறார்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளி... மேலும் பார்க்க