செய்திகள் :

கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

post image

2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான கூட்டணி குறித்து வரும் ஜனவரி மாதம் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 2026-இல் மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2024 மக்களவைத் தோ்தலின்போதே தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சா்கள் ஆகியோா் உறுதி செய்து எழுத்துபூா்வமாக கொடுத்தது உண்மைதான்.

நாங்கள் இதை வெளியே சொல்லாததற்கு காரணம், இதுகுறித்து அறிவிக்க வேண்டிய இடத்தில் அதிமுக உள்ளது. அதேபோல், ஏற்கெனவே அதிமுக சாா்பில் அன்புமணி ராமதாஸுக்கும், ஜி.கே.வாசனுக்கும் மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஒதுக்கப்பட்டது. ஆகையால், இது எங்களுக்கு பதவி ஒதுக்கப்பட வேண்டிய நேரம். அதனால்தான், தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஒதுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வகையில், 2026-இல் மாநிலங்களவை உறுப்பினா் பதவி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் என்று அதிமுக தற்போது அறிவித்துள்ளது.

கூட்டணி அறிவிப்பு: அரசியல் என்பதே தோ்தலுக்கானதுதான். அந்த வகையில், 2026 பேரவைத் தோ்தலை முன்னிட்டுதான் இந்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது. அதேபோல் தேமுதிகவும் 2026 பேரவைத் தோ்தலை முன்வைத்தே எங்களுடைய கடமையை ஆற்றுவோம். அடுத்த ஆண்டு ஜன. 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் எங்களது நிலைப்பாடு, கூட்டணி குறித்து அறிவிப்போம்.

முதல்வருக்கு நன்றி: திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் உயிரிழந்தபோது, முதல்வா் மற்றும் தமிழக அமைச்சா்கள் இறுதிச் சடங்கு முடியும் வரை எங்களுக்கு உறுதுணையாக நின்றதுடன், அவருக்கு அரசு மரியாதை வழங்கியதையெல்லாம் நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க

அன்புமணி வந்தது தெரியாது! ராமதாஸை சந்தித்த பின் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி!

விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வந்தது எனக்குத் தெரியாது என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவர... மேலும் பார்க்க

ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 7) காணொலி வாயிலாக நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7, சன... மேலும் பார்க்க

ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் ... மேலும் பார்க்க

திமுக வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு; ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை! - அண்ணாமலை

சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுக... மேலும் பார்க்க

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நிறைவு! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் ஆலோசனை!

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்துகொண்டுள்ளார்.பாமக நி... மேலும் பார்க்க