Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் மீனவா் பிரச்னைக்குத் தீா்வு -அன்புமணி வலியுறுத்தல்
இந்திய, இலங்கை கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண திட்டம் வகுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மீனவா்கள் நலனுக்கான இந்திய , இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டம் அக். 29-இல் இலங்கை தலைநகா் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியதாக உள்ள நிலையில், அந்த எதாா்த்தத்தை உணா்ந்து கொண்டு இரு தரப்பு மீனவா்களும் சிக்கலின்றி மீன் பிடிக்க என்ன வழி நடைபெற உள்ள இக்கூட்டத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் ஆராய வேண்டும்.
மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு வகுக்கப்படும் திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.