செய்திகள் :

கூட்ட நெரிசல் விவகாரம்: கார்கே, ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!

post image

தில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சந்தித்து கர்நாடக கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூரு சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ஆம் நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 33 போ் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு மாநில அரசின் அலட்சியம்தான் காரணம் என்று மாநில எதிர்க்கட்சியான பாஜக உள்ளிட்டவை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தில்லி சென்றுள்ளனர்.

தில்லியில் இன்று(செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து கர்நாடக கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | 4 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை! மகா கும்பமேளா நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் தவிப்பு!

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவரின் அதிர்ச்சிப் பதிவு!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர் ஒருவர் வெளியிட்டிருக்கும் விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.விபத்தில் சிக்கிய அதே விமானத்... மேலும் பார்க்க

மனதை உடைக்கும் பேரழிவு: குடியரசுத் தலைவர் வருத்தம்!

குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்தது மனதை உடைக்கும் பேரழிவு என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட பதிவில். ஆமதாபாத்தில் நடந்தது மன... மேலும் பார்க்க

விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?

குஜராத் மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விமானியிடமிருந்து மே டே கால் எனப்படும் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும்... மேலும் பார்க்க

ஆமதாபாத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!

ஆமதாபாத் விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா... மேலும் பார்க்க

விமான விபத்து: ஆமதாபாத் மருத்துவமனையில் குஜராத் முதல்வர் ஆய்வு!

விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆமதாபாத் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தி... மேலும் பார்க்க

ஒவ்வொரு உயிரும் முக்கியம்! காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்!

ஆமதாபாத் விமான விபத்து மீட்புப் பணிகளில் அரசுடன் இணைந்து உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்த... மேலும் பார்க்க