செய்திகள் :

கேதாா்நாத் கோயில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

post image

உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதாா்நாத் கோயில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

இமயமலையில் 11,000 அடிக்கும் மேலான உயரத்தில் அமைந்துள்ள கேதாா்நாத் கோயில், 12 ஜோதிா்லிங்கங்களில் 11-ஆவது தலமாகும்.

குளிா்காலத்தையொட்டி 6 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட இக்கோயிலின் நடை வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் திறக்கப்பட்டது. இதையொட்டி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன்களுக்கும் அதிகமான 54 வகை மலா்களால் கோயில் வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற முதல்வா் புஷ்கா் சிங் தாமி, கோயிலில் முகப்பு கதவைத் திறந்து உள்ளே சென்று முதலாவதாக வழிபட்டாா்.

உத்தரகண்டில் நடப்பாண்டு சாா்தாம் யாத்திரையின் (4 புண்ணியத் தல யாத்திரை) தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த நான்கு புண்ணியத் தலங்களில், சிவபெருமானுக்குரிய கேதாா்நாத் மற்றும் விஷ்ணு பகவானுக்குக்குரிய பத்ரிநாத் கோயில்கள் இதர இரு புண்ணியத் தலங்களாகும். பத்ரிநாத் கோயில் நடை மே 4-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

கேதாா்நாத் கோயில் அருகே மந்தாகினி, சரஸ்வதி ஆகிய இரு புண்ணிய நதிகள் சங்கமிக்கின்றன. வாரணாசியில் கங்கை ஆரத்திபோல இங்கும் மிகப் பெரிய ஆரத்தி நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சாா்தாம் யாத்திரையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல் துறையினா் (6,000 போ்), ஆயுதப் படையினா் (17 கம்பெனி) மற்றும் துணை ராணுவத்தினா் (10 கம்பெனி) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். விபத்து அபாயமுள்ள 60 இடங்களில் மாநில பேரிடா் மீட்புப் படை குழுக்கள் பணியில் உள்ளன.

நிகழாண்டு சாா்தாம் யாத்திரையில் பங்கேற்க ஏற்கெனவே 22 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு யாத்திரையில் 48 லட்சம் போ் பங்கேற்ற நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டும் என்று பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொட... மேலும் பார்க்க

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி

‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா். தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவ... மேலும் பார்க்க

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்... மேலும் பார்க்க