செய்திகள் :

கேரளத்தில் கத்தி முனையில் வங்கிக் கொள்ளை: கைதான நபர் அளித்த வாக்குமூலம்

post image

கேரளத்தில் கத்தி முனையில் வங்கியில் கொள்ளையடித்த சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், சாலக்குடி அருகே உள்ள வங்கியில் வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் கத்தி முனையில் கொள்ளையடித்து தப்பிச் சென்றார். தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் கையுறை அணிந்து, முதுகில் பையுடன் வந்ததாகக் கூறப்பட்ட அந்த மர்மநபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு, சுமார் ரூ.15 லட்சம் ரொக்கத்துடன் தப்பிச் சென்ற சந்தேக நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் சாலக்குடியைச் சேர்ந்த ரிஜோ ஆண்டனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணையில், கடனை அடைப்பதற்காக பணத்தை திருடியதை ஆண்டனி ஒப்புக்கொண்டார்.

அவரது இல்லத்தில் இருந்தே அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் மேலும் கூறினர். அவரிடம் இருந்து சுமார் 10 லட்சத்தை மீட்ட அவர்கள், மீதமுள்ள தொகையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சூர் ஊரக காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில், நன்கு திட்டமிடப்பட்ட விசாரணை, சந்தேக நபரை கண்டுபிடிக்க போலீஸுக்கு உதவியது.

மும்மொழிக் கொள்கை விவகாரம்: மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்!

குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று நாட்களுக்கு முன்பு வங்கி கிளைக்கு வந்து, பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை வங்கியில் எந்த அதிகாரிகளும் இருப்பதில்லை என்பதை நோட்டமிட்டுள்ளார் என்றார். வெளிநாட்டில் செவிலியராக பணிபுரியும் அவரது மனைவி அனுப்பும் பணத்தை ஆண்டனி ஆடம்பரமான முறையில் செலவு செய்து வந்துள்ளார்.

இதனால் மனைவி திரும்பி வருவதற்கு முன்பு செலவு செய்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க