செய்திகள் :

கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! அணைகள் திறப்பால்..மக்கள் வெளியேற்றம்!

post image

கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 28) இந்திய வானிலை ஆய்வு மையம் ”ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்கூட்டிய தொடங்கியது முதல், அம்மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புறம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 28) ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், அங்குள்ள ஏராளமான ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகளினுள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதிவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், பல முக்கிய அணைகள் நிரம்பியுள்ளதால், அவை வரிசையாகத் திறக்கப்பட்டு வருகின்றன. வயநாடு மாவட்டத்திலுள்ள பனாசுரா அணை மற்றும் பத்தனம்திட்டாவின் மூழியாறு அணை ஆகியவை ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.

திருச்சூரின் பீச்சி அணை நிரம்பியுள்ளதால், இன்று (ஜூன் 28) மதியம் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாலக்காடு மாவட்டத்தின் கஞ்சிரபுழா, மலம்புழா மற்றும் மீன்கரா ஆகிய அணைகள் நிரம்பியதால், இன்று அவை திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இடுக்கி மாவட்டத்திலுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கியதும் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அதிகாரிகள், நேற்று (ஜூன் 27) அறிவித்தனர். இன்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 135.70 அடி உயரத்துக்கு நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று (ஜூன் 27) அம்மாவட்டத்திலுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,220 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

SUMMARY

Orange alert for 5 districts in Kerala. People evacuated due to dams opening.

இதையும் படிக்க:திகாவில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் 3 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.பிரதான கோயிலி... மேலும் பார்க்க

மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங். விமர்சனம்

’அமிர்த காலம்’ என்று அரசு சொல்லிக்கொள்ளும் இக்காலக்கட்டத்தில் ’மக்களின் சேமிப்பு காலி; முதலீட்டில் வளர்ச்சி இல்லை; மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது’ என்று கா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் இருக்கக் கூடாது: அம்பேத்கரை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் வரவேற்றுள்ளார்.கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்தி... மேலும் பார்க்க

மும்பை: கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலி

மும்பையில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், வொர்லியில் கடலில் அஸ்தியை கரைத்தபோது 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். ஒருவர் க... மேலும் பார்க்க

' ரா' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

இந்தியாவின் 'ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது தலைவராக உள்ள ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுளள்து. இதனையடுத்து அந்த பதவிக்கு புதிய ... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "சர்வதேச விண்வெளி நிலையத்தில்... மேலும் பார்க்க