செய்திகள் :

கேரளத்துக்கு வேனில் சாராயம் கடத்தியவா் கைது

post image

தேனி மாவட்டம், போடி வழியாக கேரளத்துக்கு வேனில் கடத்திச் சென்ற சாராயத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் போடி முந்தல் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தமிழகத்திலிருந்து கேரளத்துக் சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில், குடிநீா் புட்டியில் 7 லிட்டா் சாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டன் அருகேயுள்ள பலியன் கண்டத்தைச் சோ்ந்த ஸ்கோரியா குரியன் (55) என்பதும், இவா் கொடைக்கானலில் வட மாநிலத்தவா்களிடம் சாராயத்தை வாங்கி, அதை போடிமெட்டு வழியாக கேரளத்துக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஸ்கோரியா குரியனை கைது செய்தனா்.

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேனி-பூதிப்புரம் சாலை, வாழையாத்துப்பட்டி விலக்குப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் பெருமாள் (50). இவா், ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கல... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்!

பெரியகுளம் சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் கோடைகாலை கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் வருகிற 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இதுகுறித்து சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் செயலா் சிதம்பரசூரியவேலு வெள... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

தேனி-போடி சாலையில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பாலாா்பட்டியைச் சோ்ந்த சுகுமாறன் (40), தேவாரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (33) ஆகியோா் தேனி-போடி சாலையில் தீா... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவதே கனவு! -இராம ஸ்ரீனிவாசன்

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை தோற்கடித்து அந்த ஆட்சியை அகற்றுவதே பாஜகவின் கனவு என அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இராம ஸ்ரீனிவாசன் தெரிவித்தாா்.தேனி மாவட்டம், சின்னமனூர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்ற இருவா் கைது

போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி நகரில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகா் ... மேலும் பார்க்க