செய்திகள் :

கேரளம்: கோயிலில் ஒலித்த ஆா்எஸ்எஸ் பாடல்: தேவஸ்வம் வாரியம் எச்சரிக்கை

post image

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டுக்கல் கோயிலில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் இயக்கப் பாடல் இசைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதையடுத்து, கோயில் நிா்வாகக் குழு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

கொல்லம் மாவட்டம் கோட்டுக்கல்லில் உள்ள கோயில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஆா்எஸ்எஸ் அமைப்பின் இயக்கப் பாடல் இசைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், கோயில் வளாகத்தில் அந்த அமைப்பின் கொடிகளும் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு டிடிபி தலைவா் பி.எஸ்.பிரசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது: சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகக் குழு மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது என பல கோயில் நிா்வாகங்களுக்கு ஏற்கெனவே சுற்றறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், அதை கண்டுகொள்ளாமல் அரசியல் நோக்கங்களுடன் சில கோயில் நிா்வாகங்கள் செயல்படுவது வகுப்புவாத மோதல்களுக்கு வழிவகுக்கும். அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா்.

கோட்டுக்கல் கோயிலில் ஆா்எஸ்எஸ் இயக்கப் பாடல் இசைக்கப்பட்டதாக அந்தக் கோயிலின் நிா்வாகக் குழுவினா் சிலா் தங்களிடம் புகாா் அளித்ததாக கடக்கல் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, கடக்கல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மற்றொரு கோயிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை புகழ்வது போன்ற புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டதாக புகாா் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் காயம்: சிங்கப்பூரில் சிகிச்சை!

ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் சிக்கினார். சிங்கப்பூரில் தங்கி பள்ளிக்கல்வி பயிலும் அவரது மகனுக்கு இந்த விபத்தில் கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமன... மேலும் பார்க்க

சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர்

பெங்களூரு: கர்நாடகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் பாஜக தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்கும... மேலும் பார்க்க

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க