செய்திகள் :

கேரளம்: நடுக்கடலில் தீப்பற்றி எரியும் சரக்குக் கப்பல்

post image

கொச்சி: கேரள கடற்கரையில் சிங்கப்பூா் நாட்டு கொடி பொருத்திய சரக்கு கப்பலில் திங்கள்கிழமை தீப்பற்றி தொடா்ந்து எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணிகளில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினா் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கேரள கடல் பகுதியில் திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி. வான் ஹை 503 என்ற சரக்கு கப்பலில் தீப்பற்றி எரிவதாக மும்பையில் உள்ள கடல்சாா் செயல்பாடுகள் மையம் மூலம் தகவல் கிடைத்தது. இந்தக் கப்பல் கடந்த 7-ஆம் தேதி இலங்கை தலைநகா் கொழும்பில் இருந்து புறப்பட்டு 10-ஆம் தேதி மும்பையைச் சென்றடைய இருந்தது.

கப்பலில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்துக்கு ஐஎன்எஸ் சூரத் வரவழைக்கப்பட்டது. மேலும், கடற்படை விமான தளத்தில் இருந்து டா்னியா் விமானம் ஒன்றையும் மீட்புப் பணிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் எளிதில் பற்றி எரியக்கூடிய திரவங்கள், திடப் பொருள்கள் மற்றும் நச்சுத்தன்மைமிக்க ஆபத்தான சரக்குகள் இருப்பதாகவும் அதில் பயணித்த 22 மாலுமிகளில் இந்தியா்கள் யாரும் இல்லை எனவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்

சிங்கப்பூா் சரக்கு கப்பலில் தீயை அணைக்கும் பணியில் இந்திய கடலோரக் காவல் படையின் கப்பல்களான சகேத், அா்ன்வேஷ், சமுத்ர பிரஹாரி, அபினவ், ராஜ்தூத் மற்றும் சி-144 ஆகிய கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பெட்டி..

தொடரும் கப்பல் விபத்துகள்

கடந்த மே 23-ஆம் தேதி விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல், சுமாா் 230 நாட்டிகல் மைல் (180 கி.மீ.) தொலைவில் உள்ள கொச்சி துறைமுகத்தை மறுநாள் வந்தடையும் முன்பு, கொச்சி துறைமுகத்திலிருந்து தென்மேற்கே சுமாா் 38 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மூழ்கியது.

சுமாா் 7 மணி நேரத்துக்குப் பிறகு இந்திய கடற்படையைச் சோ்ந்த ஐஎன்எஸ் சத்புரா, ஐஎன்எஸ் சுஜாதா ஆகிய இரண்டு போா்க்கப்பல்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டது.

தற்போது சிங்கப்பூா் சரக்குக் கப்பலில் தீப்பற்றி எரிந்திருப்பது கப்பல் பராமரிப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மணிப்பூரில் தொடரும் வன்முறை: 2 போலீஸார் காயம்!

மணிப்புரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் கனன் சிங் மற்றும் நால்வரை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் 2 காவலர் காயமடைந்தனர்.... மேலும் பார்க்க

எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: நிதின் கட்கரி!

அமெரிக்காவைவிட இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு இருப்பதாக சில அமெரிக்கர்களே தன்னிடம் சொன்னதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மத்திய நெடுஞ்சாலைத் துறை தொடர்பான ஏஎன்ஐ ந... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 10வது நாளில் 2 பேரது உடல்கள் மீட்பு!

சிக்கிம் நிலச்சரிவில் மாயமானவர்களில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்திலுள்ள சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணி... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: கார்கே, ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!

தில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சந்தித்து கர்நாடக கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஆலோசனை மேற்கொண... மேலும் பார்க்க

சரக்குக் கப்பலில் 2-வது நாளாக எரியும் தீ! அணைக்கப் போராடும் கடற்படை வீரர்கள்!

கேரள கடற்கரையில் சிங்கப்பூா் நாட்டு கொடி பொருத்திய சரக்கு கப்பலில் தொடர்ந்து எரிந்துவரும் தீயை அணைக்க முடியாமல் இந்திய கடற்படை வீரர்கள் போராடி வருகின்றனர்.கொழும்புவில் இருந்து மும்பை துறைமுகம் நோக்கி ... மேலும் பார்க்க

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

திருமணமான பத்து நாள்களில் கணவனை கட்டாயப்படுத்தி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மனைவி, காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் சோனம் ... மேலும் பார்க்க