செய்திகள் :

கேரளம்: பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கி கொள்ளை

post image

கேரளத்தில் பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், சாலக்குடி அருகே வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை நுழைந்த நபர் ஒருவர் கத்தி முனையில் கொள்ளையடித்து, ஏராளமான பணத்துடன் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

சாலக்குடி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொள்ளைச் சம்பவம் குறித்து அவசர கால எண்ணில் இருந்து (ஈஆர்எஸ்எஸ்) பிற்பகல் தங்களுக்கு அழைப்பு வந்தது.

பிரேசில்: பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் காயம்

சாலக்குடி அருகே உள்ள பொட்டாவில் உள்ள வங்கிக் கிளைக்கு உடனடியாக ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட சரியான தொகை மற்றும் கொள்ளையனின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.

சந்தேக நபரை அடையாளம் காணவும், குற்றத்தைச் செய்த பின்னர் அவர் எந்த திசையில் தப்பி ஓடினார் என்பது குறித்து விவரங்களை போலீஸ் குழு சேகரிப்பதோடு சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கோவளம் கடலில் அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலி

கோவளம் கடலில் 75 வயது அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலியானதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த பெண், க... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி ... மேலும் பார்க்க

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்ப... மேலும் பார்க்க

கும்பமேளாவில் நீராடிய மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான் தனது குடும்பத்தினருடன் நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க