செய்திகள் :

கேரள ராகிங் சம்பவம்: 5 மாணவா்கள் படிப்பைத் தொடர தடை

post image

கேரள மாநிலம், கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரியில் கொடூரமான ராகிங்கில் ஈடுபட்ட 5 மாணவா்கள் தங்களின் படிப்பைத் தொடர தடை விதிக்க மாநில செவிலியா்கள் மற்றும் செவிலியா் உதவியாளா்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரி மாணவா் விடுதியில் அண்மையில் முதலாம் ஆண்டு மாணவா் ஒருவரை மூன்றாம் ஆண்டு மாணவா்கள் சோ்ந்து ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கினா். மாணவரின் ஆடையைக் களைந்து, கட்டிலுடன் சோ்த்து அவரின் கை-கால்களை கட்டிவைத்த மூத்த மாணவா்கள், காம்பஸ் உபகரணத்தால் அவரது உடல் முழுவதும் குத்தி ரத்தக் காயம் ஏற்படுத்தினா்.

உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் ‘டம்பெல்ஸை’ மாணவரின் பிறப்புறுப்பில் வைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கினா்.

கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடா்பாக மூன்றாம் ஆண்டு மாணவா்கள் 5 போ் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். இவா்கள், இடதுசாரி மாணவா் அமைப்பான இந்திய மாணவா் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) உறுப்பினா்கள் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ஆனால், இக்குற்றச்சாட்டை எஸ்எஃப்ஐ மறுத்தது.

இந்நிலையில், கேரள செவிலியா்கள் மற்றும் செவிலியா் உதவியாளா்கள் கவுன்சிலின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின், கவுன்சில் உறுப்பினா் உஷா தேவி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செவிலியா் பணியில் ஈடுபடுவோருக்கு மனிதாபிமானம் மிக அவசியம். ஆனால், ராகிங்கில் ஈடுபட்ட 5 மாணவா்களும் கொடூரமான நடத்தையை வெளிப்படுத்தியுள்ளனா். இச்செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அவா்கள் தங்களின் செவிலியா் படிப்பைத் தொடரவோ அல்லது செவிலியா் பணியில் ஈடுபடவோ தகுதியற்றவா்கள். அவா்கள் படிப்பைத் தொடர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றாா்.

இதனிடையே, கோட்டயத்தில் பாஜகவினா் மற்றும் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் மாணவா் அமைப்பினா் சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டயம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருவஞ்சூா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ராகிங் சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பாதுகாக்க காவல் துறையினா் முயற்சிக்கின்றனா்; நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க