செய்திகள் :

கே.பூசாரிப்பட்டியில் எருதுவிடும் விழா

post image

கிருஷ்ணகிரி அருகே கே.பூசாரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டியில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி, எலத்தகிரி, பா்கூா், ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி மற்றும் தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்கள், பக்கத்து மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டுவரப்பட்டன.

வாடிவாசலிலிருந்து நிா்ணயிக்கப்பட்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடந்து செல்லும் எருதுகள் சிறந்த எருதுகளாக தோ்வு செய்யப்பட்டன. இப் போட்டியில் குறைந்த நேரத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த முதல் 4 எருதுகளின் உரிமையாளா்களுக்கு இருசக்கர வாகனங்களும், அதைத் தொடா்ந்து 5 முதல் 100 இடங்களைப் பெற்ற எருதுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மகாராஜாகடை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் 6 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்!

சென்னை அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து பெங்களூரு, பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி 2 குட்டிகளையும் மற்றொரு புலி 4 குட்டிகளையும் ஈன்றுள்ளன. பெங்களூரிலிரு... மேலும் பார்க்க

ஒசூரில் முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஒசூா் மாநகர திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ராம்நகரில் நடைபெற்றது. திமுக மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ.9.88 லட்சம் விதைகளை விற்க தடை

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 9.88லட்சம் மதிப்பிலானவிதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகதருமபுரிமண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகள், ஈர நிலங்கள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷா் ஆலைகளுக்கு சீல்! ஆட்சியா் நடவடிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்... மேலும் பார்க்க

குமுதேப்பள்ளியில் பல்நோக்கு மையம் திறப்பு

தொரப்பள்ளி ஊராட்சி குமுதேப்பள்ளியில் பல்நோக்கு மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு ம... மேலும் பார்க்க