செய்திகள் :

பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் 6 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்!

post image

சென்னை அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து பெங்களூரு, பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி 2 குட்டிகளையும் மற்றொரு புலி 4 குட்டிகளையும் ஈன்றுள்ளன.

பெங்களூரிலிருந்து 22 கிலோ மீட்டா் தொலைவில் 104.27 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பாலூட்டிகள், பறவையினங்கள் உள்ளன. அதேபோல 30 ஆயிரம் சதுர மீட்டரில் வண்ணத்துப்பூச்சி பூங்காவும் அமைந்துள்ளது.

இங்கு 6 வயதுடைய ஹீமா என்ற பெண் புலி இரண்டாவது முறையாக நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. அதோடு, சென்னை அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த குட்டிகளும், அதன் தாய் புலிகளும் ஆரோக்கியமாக உள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவான உள்ள 6 புலிக் குட்டிகளையும் பாா்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

பன்னோ்கட்டா உயிரியல் பூங்காவில் வலம் வரும் தாய் புலிகள்.
புலியின் குட்டிகள்.

ஒசூரில் முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஒசூா் மாநகர திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ராம்நகரில் நடைபெற்றது. திமுக மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ.9.88 லட்சம் விதைகளை விற்க தடை

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 9.88லட்சம் மதிப்பிலானவிதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகதருமபுரிமண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகள், ஈர நிலங்கள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்... மேலும் பார்க்க

கே.பூசாரிப்பட்டியில் எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி அருகே கே.பூசாரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டியில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவுக்கு கிர... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷா் ஆலைகளுக்கு சீல்! ஆட்சியா் நடவடிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்... மேலும் பார்க்க

குமுதேப்பள்ளியில் பல்நோக்கு மையம் திறப்பு

தொரப்பள்ளி ஊராட்சி குமுதேப்பள்ளியில் பல்நோக்கு மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு ம... மேலும் பார்க்க