செய்திகள் :

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ.9.88 லட்சம் விதைகளை விற்க தடை

post image

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 9.88 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளுக்கு தரமான காய்கறி, பழப் பயிா்களின் விதைகளை நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் விதை ஆய்வு துணை இயக்குநா் தலைமையிலான விதை ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்பு குழுவினா் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செயல்படும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், தனியாா் விதை விற்பனை நிலையங்கள், அரசு விதைப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 54 விதை விற்பனை நிலையங்களில் 119 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலையங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் சிறப்பு குழு ஆய்வு செய்த போது விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதை குவியல்களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள் தனியாா் ரக விதைகளுக்கான பதிவுச்சான்றுகள், விதைப்பகுப்பாய்வு முடிவு அறிக்கைகள், இருப்பு பதிவேடு, விற்பனை ரசீது ஆகியவைகள் விதை சட்டப்படி பராமரிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் 16 விதை குவியல்களில் உரிய ஆணவங்கள் பராமரிக்கப்படாததால் ரூ.9.88 லட்சம் மதிப்பிலான காய்கறி விதைகள், இதர விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் 6 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்!

சென்னை அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து பெங்களூரு, பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி 2 குட்டிகளையும் மற்றொரு புலி 4 குட்டிகளையும் ஈன்றுள்ளன. பெங்களூரிலிரு... மேலும் பார்க்க

ஒசூரில் முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஒசூா் மாநகர திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ராம்நகரில் நடைபெற்றது. திமுக மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகள், ஈர நிலங்கள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்... மேலும் பார்க்க

கே.பூசாரிப்பட்டியில் எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி அருகே கே.பூசாரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டியில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவுக்கு கிர... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷா் ஆலைகளுக்கு சீல்! ஆட்சியா் நடவடிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்... மேலும் பார்க்க

குமுதேப்பள்ளியில் பல்நோக்கு மையம் திறப்பு

தொரப்பள்ளி ஊராட்சி குமுதேப்பள்ளியில் பல்நோக்கு மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு ம... மேலும் பார்க்க