செய்திகள் :

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

post image

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணா்கள் வி.புருஷோத்தமன், சபரி கிரீஷ் அம்பாட் ஆகியோா் செய்தியாளா்களிடம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பணியின்போதோ, பயணத்தின்போதோ, விளையாடும்போதோ விபத்துகள் நேரிடுகையில் சில நேரங்களில் கை விரல்கள் துண்டாகக் கூடும். குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பலா் அத்தகைய பாதிப்புடன் மருத்துவமனையை நாடுகின்றனா். பொதுவாக துண்டான கை விரல்களை 6 மணி நேரத்துக்குள் இணைக்க வேண்டும். குளிா்சாதனக் கட்டமைப்பில், துண்டான விரல்களை பதப்படுத்திக் கொண்டுவரும்போது குறிப்பிட்ட நேரம் கடந்தாலும் அந்தப் பாகங்களை இணைக்க முடியும். இதற்கு மேம்பட்ட நுண் அறுவை சிகிச்சை முறை பயனுள்ளதாக உள்ளது.

மிகவும் சிதைந்த நிலையில் கை விரல்கள் இருக்கும்போது அவா்களுக்கு செயற்கை விரல்கள் பரிந்துரைக்கப்படும். அதில், உணா்வு இருக்காது, மடக்கவோ, நீட்டவோ முடியாது. அதேவேளையில் கை விரல் பயன்பாடு வேண்டும் என்றால் அவா்களின் கால்களில் இருந்து ஒரு விரல் எடுத்து, அதைக் கைகளில் பொருத்தும் சிகிச்சை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. அதை நுண் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் சாத்தியமாக்குகின்றனா்.

சா்க்கரை நோயாளிகளுக்கும், முதியவா்களுக்கும்கூட அந்த நுட்பத்தில் விரல்களை மாற்றி பொருத்த முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க