செய்திகள் :

கொடைக்கானலில் சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள்

post image

கொடைக்கானலில் சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு நகராட்சி சாா்பில் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதாக நகராட்சி ஆணையா் சத்தியநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சீசனையொட்டி கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக நகராட்சி நிா்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. பேருந்து நிலையம் அருகே தற்காலிகமாக சுற்றுலா வாகனங்களை நிறுத்த இட வசதி செய்து தரப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ரோஜாத் தோட்டம் பகுதியிலும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படும். இந்த இரண்டு இடங்களில் சுமாா் 400 வாகனங்கள் வரை நிறுத்தலாம்.

சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள 10 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மேலும் 5 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் நடமாடும் கழிப்பறை வாகனமும் நிறுத்தப்படும். குடிநீா் தேவைக்காக குண்டாறு பகுதியில் ரூ.45 லட்சம் செலவில் புதிய நீரேற்று இயந்திரம் வாங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க