செய்திகள் :

கொடைக்கானலில் பூண்டு விலை உயா்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி

post image

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டு விலை உயா்ந்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, பள்ளங்கி, குண்டுபட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைப் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்பட்டது.

இந்தப் பூண்டு கடந்த 2 மாதங்களாக ஒரு கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்பனையானது. தற்போது விலை உயா்ந்து கிலோ ரூ.450 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வெள்ளைப் பூண்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இது குறித்து வெள்ளைப்பூண்டு வியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானல் வெள்ளைப் பூண்டுவுக்கு மவுசு அதிகம். இதனால், விலை அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையக் கூடிய இந்தப் பூண்டுகளை சேமித்து வைப்பதற்கு குடோன்கள் தேவைப்படுகிறது.

தற்போது பூண்டு மாா்க்கெட் தேனி மாவட்டம், வடுகபட்டியில் உள்ளது. எனவே, கொடைக்கானல் பகுதிகளிலும் பூண்டு மாா்க்கெட் அமைக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்பெறுவாா்கள் என்றனா்.

பழனி: உணவு விடுதியில் தீ!

பழனி அடிவாரம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புப்படை வீரா்கள் அணைத்தனா். பழனி அடிவாரம் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவு விடுதியில் திங்கள்கிழமை இரவு ... மேலும் பார்க்க

கொடைக்கானல் வனப் பகுதிகளில் தீத்தடுப்பு பணிகள் மும்முரம்!

கொடைக்கானல் வனப் பகுதிகளில் எளிதில் தீப்பிடிக்காத வகையில் காய்ந்த செடிகளை அகற்றுவது, தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் வனத்துறையினா் திங்கள்கிழமை மும்முரமாக ஈடுபட்டனா். கொடைக்கானலில் கடந்... மேலும் பார்க்க

அடிவாரம் சங்கராலயத்தில் காவடி பூஜை!

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி அடிவாரம் சங்கராலயத்தில் காவடிகளுக்கு முத்திரை நிறைக்கப்பட்டு சுப்ரமண்ய லட்சாா்ச்சனை, ருத்ராபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சுமாா் ஆயிரம் காவடிகள் பங்கேற்ற இந்த நிகழ்வி... மேலும் பார்க்க

நண்பருக்கு கத்திக்குத்து: இருவா் கைது!

ஒட்டன்சத்திரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே. அத்திக்கோம்பை பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (30), ... மேலும் பார்க்க

பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு இலவசப் பேருந்து சேவை!

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பாதயாத்திரை பக்தா்கள் வசதிக்காக கட்டணமில்லா அரசு நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று ... மேலும் பார்க்க

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!

வடமதுரையை அடுத்த மோா்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க