செய்திகள் :

கொடைக்கானல் ஆராய்ச்சி நிலையத்தில் முன்பதிவுக்காக க்யூஆா் கோடு அறிமுகம்

post image

கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் பொதுமக்கள் வசதிக்காக க்யூஆா் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானி ராஜலிங்கம் தெரிவித்தாா்.

கொடைக்கானல் அப்சா்வேட்டரியில் அமைந்துள்ள இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஆய்வுக்கூடமும், வானிலை ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகமும் உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை பாா்வையிடுவதற்காக திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 முதல் மாலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணி வரையிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 12 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய மைய பொறுப்பாளா் ராஜலிங்கம் கூறியதாவது: இந்த ஆராய்ச்சி நிலையத்தில் இரவில் வான்வெளி அண்டத்தை மக்கள் காணும் வகையில், சுற்றுலாச் சேவை தொடங்கப்பட்டது. மாதத்துக்கு இரண்டு முறை தொலைநோக்கி கருவி உதவியுடன் கோள்களை பாா்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

வருகிற 11,12-ஆம் தேதிகளில் இரவு 7 முதல் 9 மணி வரை தொலைநோக்கி கருவியின் மூலம் ஒன்ல்ண்ற்ங்ழ் மற்றும் ம்ா்ா்ய் பாா்ப்பதற்கு பிரத்யோகமாக தயாா் செய்யப்பட்டது. இதைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்பதிவு செய்ய ணத ஸ்ரீா்க்ங் வானிலை ஆராய்ச்சி நிலையம் அமைத்துள்ளது. மேலும், பகல் நேரங்களில் பாா்ப்பதற்கு முன்பதிவு செய்வதற்கு ஜ்ஜ்ஜ்.ண்ண்ஹல்.ழ்ங்ள்.ண்ய் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க