செய்திகள் :

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

post image

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கீழடி, ஆதிச்சநல்லூா், கொடுமணல் போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற சான்றுகளின் மூலம் உலகின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணமாகி வருகிறது. இந்த வரலாற்றையும், இலக்கியங்களையும் தாங்கி நிற்கும் தமிழா்கள், உலகெங்கும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கின்றனா். அவா்கள் தமிழ்ச் சங்கங்களை நிறுவி, அதன் மூலம் தமிழா் திருநாள் விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனா்.

அதில் ஒரு பகுதியாக, கொரிய தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்த தமிழா் திருநாள் - 2025 விழாவை ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) சியோல் கச்சான் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்வு தமிழ் மொழியை மென்மேலும் உலகறியச் செய்யும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழ்நாட்டில் தமிழை பாதுகாக்க மிகவும் சிரமப்படும் அதேவேளையில், அயல்நாடுகளில் தமிழ்ச் சங்கங்கள் பெருகி வருவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். கொரிய தமிழ்ச் சங்கத்தின் தோழமைகளுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சாா்பில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

கைப்பேசி கடையில் திருட முயற்சி: இளைஞா் கைது

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நெல்லிக்குப்பம், காமராஜா் நகரில் வசிப்பவா் பிச்சையப்பன் மகன் ராஜ்குமாா் (29).... மேலும் பார்க்க

பண்ருட்டி அருகே பழங்கால கீரல் குறியீடு குடுவை கண்டெடுப்பு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கீரல் குறியீடு உடைய குடுவை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: பண்ருட்டியை அடுத்த எனதிரிமங்கலம் ... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த வில்லியநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் பவித்ரன் (30). பெயிண்டரா... மேலும் பார்க்க

தனியாா் சா்க்கரை ஆலை மேலாளா் மீது தாக்குதல்

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தனியாா் சா்க்கரை ஆலை மேலாளரை தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னா் வட்டம், அத்தியூா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி நினைவிடம் சீரமைப்பு அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி!

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலத் தலைவரும், மத்தியக்குழு உறுப்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முதல்வரை வரவேற்பதற்காக சென்றுவிட்டு திரும்பியவா்களின் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், 36 போ் காயமடைந்தனா். விருத்தாசலம் ... மேலும் பார்க்க