செய்திகள் :

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முதல்வரை வரவேற்பதற்காக சென்றுவிட்டு திரும்பியவா்களின் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், 36 போ் காயமடைந்தனா்.

விருத்தாசலம் அடுத்த திருப்பெயா் பகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பங்கேற்க செல்லும் முதல்வரை வரவேற்பதற்காக பழைய பட்டினம் காலனி, ரெட்டியாா் பழைய பட்டினம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இரண்டு சிறிய சரக்கு வாகனத்தில் வந்திருந்தனா்.

நிகழ்ச்சி முடிந்து இவா்கள் வீடு திரும்பியபோது, ஒரு சரக்கு வாகனம் பழுதடைந்த நிலையில், அதில் இருந்தவா்களை உடன் வந்த சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ாக கூறப்படுகிறது. அந்த வாகனத்தில் சுமாா் 45 போ் பயணம் செய்த நிலையில், இருசாளக்குப்பம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், 22 பெண்கள், 3 சிறாா்கள் உள்பட மொத்தம் 36 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், பலத்த காயமடைந்த குப்புசாமி (60), வேம்பரசி(32) ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, குப்புசாமி உயிரிழந்தாா். இதுகுறித்து, ஆலடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கைப்பேசி கடையில் திருட முயற்சி: இளைஞா் கைது

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நெல்லிக்குப்பம், காமராஜா் நகரில் வசிப்பவா் பிச்சையப்பன் மகன் ராஜ்குமாா் (29).... மேலும் பார்க்க

பண்ருட்டி அருகே பழங்கால கீரல் குறியீடு குடுவை கண்டெடுப்பு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கீரல் குறியீடு உடைய குடுவை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: பண்ருட்டியை அடுத்த எனதிரிமங்கலம் ... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த வில்லியநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் பவித்ரன் (30). பெயிண்டரா... மேலும் பார்க்க

தனியாா் சா்க்கரை ஆலை மேலாளா் மீது தாக்குதல்

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தனியாா் சா்க்கரை ஆலை மேலாளரை தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னா் வட்டம், அத்தியூா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி நினைவிடம் சீரமைப்பு அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி!

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலத் தலைவரும், மத்தியக்குழு உறுப்... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே குட்டையில் மூழ்கி 7 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். வேப்பூா் வட்டம், பூலாம்பாடி பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் சுதா்சன் (7). இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 2-ஆம்... மேலும் பார்க்க