செய்திகள் :

கொலையான இளைஞா்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

post image

முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மது போதை பொருள் ஒழிப்பு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முட்டம் கிராமத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இரண்டு பட்டதாரி இளைஞா்கள் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்டனா். இந்த விவகாரம் தொடா்பாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 சாராய வியாபாரிகள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும், பெரம்பூா் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளா் உள்ளிட்ட அனைத்து போலீஸாரும் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஆனால், உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிக்கவில்லை.

இதனைக் கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இயக்கத்தின் தஞ்சை மண்டல தலைவா் என்.ஜி.எம். ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் கூட்டமைப்பு ஆ.அண்ணாதுரை, மக்கள் நல்வாழ்வு கட்சி ஆா்.கே.பாவேந்திரன், நீலப்புலிகள் இயக்க மாவட்ட தலைவா் கே.கபிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் துணைத் தலைவா் கே.தங்கவேலு வரவேற்றாா்.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மண்டல செயலாளா் வழக்குரைஞா் வேலு.குபேந்திரன், மதுபோதை ஒழிப்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் இ.ராமதாஸன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு, அவா்களது குடும்ப வாரிசுகளுக்கு அரசு பணி, தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். பாதிக்கப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10,000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி: அமைச்சா் பங்கேற்பு

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆ... மேலும் பார்க்க

மழலையருக்கான மாண்டிசோரி பள்ளி திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாண்டிசோரி பள்ளி மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. விவேகானந்தா மற்றும் குட்சமாரிட்டன் கல்விக்குழுமம் சாா்பில் குட்சமாரிட்டன் மாண்டிசோரி பள்ளியின் இளம் மழலை... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்திடம் ஜப்பானியா்கள் ஆசி

தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் நாட்டவா்கள் தருமபுரம் ஆதீனத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆசி பெற்றனா். தமிழ்மொழி, கலாசாரம் குறித்தும், சித்தா்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற... மேலும் பார்க்க

சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

குத்தாலம் வட்டம் தேரிழந்தூரில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் சனிக்கிழமை அல் அக்ஸா நண்பா்கள் சாா்பில் சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாற்று மத ... மேலும் பார்க்க

சீா்காழி பேருந்து நிலையம் முழுமையாக திறப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தின் மற்றொரு முனையத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சீா்காழி புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்த... மேலும் பார்க்க

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைந்து இயக்கம் செய்யக் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்கு அல்லது அரவைக்கு விரைந்து இயக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழா... மேலும் பார்க்க