செய்திகள் :

கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?

post image

கொலோம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென் அமெரிக்காவின் கொலோம்பியாவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரங்களும் சூடுபிடித்துள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமையில் பொகோட்டாவில் பிரசாரம் மேற்கொண்டிருந்த ஜனநாயக மையக் கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் மிகுவல் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், மிகுவலின் தலையில் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவமானது, கொலோம்பியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகுவலின் மீதான துப்பாக்கிச்சூடு குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, மிகுவலின் குடும்பத்துக்கு உறுதுணையாகவும் ஆறுதலாகவும் இருப்பதாகக் கூறினார்.

1991 ஆம் ஆண்டில் மிகுவலின் தாயாரும் பத்திரிகையாளருமான டயானா டர்பே, போதைப்பொருள் கடத்தல்காரர் பாப்லோ எஸ்கோபரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?

உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது.ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றா... மேலும் பார்க்க

டிரம்ப் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! லாஸ் ஏஞ்சலீஸில் அமைதியின்மை!

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அந்நாட்டு அரசு கைது செய்து வருவதற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, த... மேலும் பார்க்க

80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலுக்கிடையே, தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார்.அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

காஸா: தாய்லாந்து பிணைக் கைதிகளின் உடல் மீட்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இது குறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை கூறியதாவது: தாய... மேலும் பார்க்க

மெக்ஸிகோவில் விமான விபத்து

மெக்ஸிகோவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 போ் உயிரிழந்தனா். கௌதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஓரிடத்தில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்கக் கூடிய, குறிப்பிட்ட வகையைச் சோ்ந்த ஈக்களை விம... மேலும் பார்க்க

கிழக்கு உக்ரைன் நகரில் ரஷியா குண்டுமழை!

கிழக்கு உக்ரைனின் காா்கிவ் நகரில் மிகப் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 3 போ் பலியாகினா்; 21 போ் காயமடைந்தனா். இந்த தாக்குதல், மூன்று ஆண்டுகாலப் போரில் ரஷியா... மேலும் பார்க்க