செய்திகள் :

கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்

post image

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குதான் அதிகாரம் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான்,

"கச்சா எண்ணெய் பொருள்களின் விலை குறையும்போது பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட பொருள்கள் விலை குறைய வேண்டும். ஆனால், அவை உயர்த்தப்படுவதால் நிர்வாகம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளலாம். கேஸ் விலையை ரூ. 50 உயர்த்திருப்பது மக்களுக்கு துன்பத்தைத்தான் தரும்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் நானும் அண்ணாமலையும் பங்கேற்றுள்ளோம். நேற்று ஒரு கல்லூரி விழாவில் என்னையும் அழைத்திருந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அழைத்து இருந்தார்கள். கல்லூரியின் தலைவர் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அதனால் நான் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்.

அண்ணாமலையை அவர் பாஜக தலைவராவதற்கு முன்பு இருந்து எனக்கு தெரியும். அவருடைய கட்சியின் கொள்கை வேறு, என்னுடைய கட்சியின் கொள்கை வேறு, அதற்காக நானும் அவரும் அண்ணன்-தம்பி இல்லை என்று ஆகிவிடுமா?

திமுகவில் 99 சதவீதம் பேர் என்னுடைய சொந்தக்காரர்கள்தான் உள்ளார்கள், அதற்காக அவர்கள் எல்லாரிடமும் சண்டையிடவா முடியும்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குத்தான் அதிகாரம் இருக்க வேண்டுமே தவிர, நியமிக்கப்படுபவர்களுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது. ஆளுநர் விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தான் அண்ணா காலத்தில் இருந்தே கூறி வருகிறோம்.

விழாக்காலங்களில் நாடகங்கள், பாட்டு கச்சேரிகள் நடப்பது போலவே தேர்தல் காலங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. இது வழக்கமாகிவிட்டது.

கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் திண்டுக்கலை சேர்ந்த மோகன் ராம், திருச்சியை சேர்ந்த சாமி ரவி ஆகியோரை இந்த வழக்கு தொடர்பாக என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் யாரையாவது கைது செய்து என்கவுன்டர் செய்ய வேண்டும் என்கிற நிலையில் உள்ளார்கள். இது எந்த மாதிரியான சட்டம் ஒழுங்கு?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் உண்மையான குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை, மூன்று பேரை என்கவுன்டர் செய்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் அதிக வழக்குகள் என் மீதுதான் உள்ளது என்கிற பெருமை எனக்குள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை பேசப்படுவதே இல்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கட்சிகள் கூட்டணி வைத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும், அவர்கள் முடிவெடுத்தால்தான் ஆட்சி மாற்றம் வரும்.

தீமையை நன்மையை வைத்துதான் ஒழிக்க முடியும். நாங்கள் ஆட்சி மாற்றத்திற்கு வந்த ஆட்கள் கிடையாது, அடிப்படை மாற்றத்திற்காக செயல்படுபவர்கள்.

எங்களின் கொள்கை மொழி தமிழ், பயன்பாட்டு மொழி ஆங்கிலம். உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் எங்களுடைய விருப்ப மொழி தான். எம்மொழியையும் நாங்கள் கற்போம்" என்றார்.

இதையும் படிக்க | ஒரே மேடையில் மாறிமாறி புகழ்ந்து பேசிக்கொண்ட சீமான், அண்ணாமலை!

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினா் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் விடுத்த அறிக்கை: 12 ஆண்டுகளுக... மேலும் பார்க்க