'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
கோடையில் 22,000 மெகாவாட் மின் தேவை: அமைச்சர் செந்தில் பாலாஜி
கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில்,
”கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலை ஏற்படலாம். எந்தத் தடையும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 78,000 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரத் துறையில் காலியாகவுள்ள அவசியமான பணியிடங்கள் விரைவில் நிரப்படும்.
2030-க்குள் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதத்திற்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிக்க:'திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்' - சேகர்பாபு